காலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்

கொடிப்பாடல்


தாயின் மணிக்கொடி பாரீர் அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின்..


ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் செய்ய
பட்டொளி வீசிப் பறக்குது பாரீர்
தாயின்..


கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் எங்கும்
கானரும் வீரர் பெருந் திரள் கூட்டம்
நம்பற்குரியர் அவ்வீரர் தாங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்
தாயின்..

- ஆசிரியர் :*


3/6